குருத்வாரா நங்கலி சாஹிப் ஒரு சிறிய குன்றின் மீது பூஞ்சில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. த்ருங்கலி ஓடை கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாரா சீக்கிய சமூகத்தின் பழமையான மத மையங்களில் ஒன்றாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனை செய்ய ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.
சந்த் பாய் ஃபேரு சிங்கின் நான்காவது சந்ததியான தாகூர் பாய் மேளா சிங்கினால் 1803 ல் கட்டப்பட்டது இந்த குருத்வாரா. சிங் வம்சத்தின் முதல் அரசர், மகாராஜா ரஞ்சித் சிங் 1814 போது இங்கு வந்தார்.
பின் 1823 இல் அவர் இந்த குருத்வாராவை நான்கு கிராமங்களுடன் இணைக்கச் செய்தார். குருத்வாரா தற்போது 70 அறைகள் மற்றும் ஒரு லாங்கர் மண்டபம் அல்லது சமூக சமையலறையை கொண்டிருக்கிறது.
1947-களில், குருத்வாரா அழிக்கப்பட்டப் பின், தலைவராக இருந்த மஹந்த் பச்சீட்டர் சிங் , அதன் சீரமைப்பு பணியைச் செய்யதார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மதக்கூட்டம் குருத்வாரா வளாகத்தில் நடைபெறுகிறது. பைசாகி, ஒரு பிரபலமான சீக்கிய விழா, ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஒரு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.