பூஞ்ச் கோட்டை அல்லது பூஞ்ச் கிலா, பூஞ்ச் நகரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இது 16 ஆம் நூற்றாண்டு முதல் உள்ள ஒரு பண்டைய கோட்டை. பூஞ்ச் ராஜா ரஸ்தம் கான் மூலம் 1713 ல், முகலாயர்களின் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. பூஞ்ச் கோட்டையின் கட்டுமான பணி முடிக்க பல ஆண்டுகள் பிடித்தன.
சீக்கியர்கள் ஆட்சி காலத்தில், கோட்டையின் பிரதான பகுதிகளின் கட்டிடக்கலையில் சீக்கிய பாணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பூஞ்சில் உள்ள டோக்ரா ராஜை நிறுவிய ராஜா மோடி சிங், கோட்டையின் முன் தடுப்பு அமைப்பை அழகுபடுத்த ஐரோப்பாவில் இருந்து கட்டிடக்கலை நிபுனர்களை வரவழைத்தார்.