சுவாமி புத்த அமர்நாத் ஜி கோயில் பூஞ்சில் இருந்து 25 கி.மீ.ல் அமைந்துள்ளது. இது இந்துக்களின் மிகவும் புனிதமான சமய மையங்களில் ஒன்றாகும். கோவில் காக்ரி மற்றும் புல்ஸ்டா நாடி நீரோடைகள் சங்கமிக்கும் இடத்தில் பிர் பஞ்சால் மலை நடுவில் உள்ளது.
ஒரு பெரிய கல்லால் தயாரான சன்னதியிள்ள இந்த கோயிலின் நான்கு கதவுகள் ஒவ்வொரு திசையில் , அதாவது வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கில் எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்துக்களின் நான்கு சாதிகளும் வர முடியும் என்று இதற்கு அர்த்தம்.
இது பிராமணர்கள் அல்லது குருக்கள், ஷத்திரியர்கள் அல்லது சிப்பாய்கள், வைசியர்கள் அல்லது வியாபாரிகள் மற்றும் சூத்ராஸ் அல்லது சேவை வழங்குநர்கள் அடங்குவர். ஒரு வெள்ளை கல் சிவ லிங்கமும் இந்து மதத்தின் மற்ற கடவுள்களின் சிலைகள் இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் உள்ளே செல்லும் முன் இங்குள்ள நீரூற்றுகளில் குளிப்பது புனிதமாக கருதப்படுகிறது . மேளா சுவாமி புத்த அமர்நாத் ஜி எனப்படும் ஒரு பிரபலமான இந்து மத பண்டிகை , ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தனுக்கு முந்தையதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தஷ்னாமி அக்கார பூஞ்சில், ஹவன் அல்லது ஹோமம் மற்றும் சாரி முபாரக் பூஜை நடைபெறுகிறது.