வழக்கமான சரணாலயங்களைப் போலல்லாமல், போர்பந்தர் பறவைகள் சரணாலயம் இயற்கையோடு இயைந்த சூழலில் பறவைகள் வாழும் ஒரு அற்புதமான இடமாகத் திகழ்கிறது.
1988 ஆம் வருடத்தில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, அழகிய பசுமையான மரங்கள் மற்றும் செடிகளால் சூழப்பட்ட ஒரு நீர்நிலையாகக் காணப்படுகிறது.
சாம்பல் நிற நாரைகள் முதல் வாலுடைய நீர்ப்பறவை வகை வரை, கரண்டிவாயன்கள் முதல் வாத்துகள் வரை, பெண்வாத்துகள் மற்றும் கிளுவை வாத்துகள் முதல் இலைக்கோழிகள், அரிவாள்மூக்கன்கள், மற்றும் பெருநாரைகள் வரை பலவகை புள்ளினங்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த சரணாலயம், பல வண்ணங்களில் காணப்படும் பறவையினங்களை விரும்புவோர், கட்டாயம் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு இடமாகும்.
மில்லியன் கணக்கில் வந்து குவியும் புலம்பெயர் பறவைகளால் இந்த இடம் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் காலமான குளிர்காலமே இங்கு செல்வதற்கு ஏதுவான காலமாகும்.