பிரபாஸ் கிரி என்ற ஒரு அழகிய சுற்றுலாத் தலம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் அலகாபாத் நகரத்துக்கு 60 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஜெயின் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரபாஸ் கிரி ஒரு முக்கிய புண்ணியத் தலமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஜெயின் இன மக்களின் மிக முக்கிய புண்ணியத் தலமான பகவான் பத்ம பிரபு ஆலயம் பிரபாஸ் கிரியில் அமைந்திருக்கிறது. ஜெயின் சமயத்தின் 6-வது தீர்த்தங்கரரான பகவான் பத்ம பிரபுவின் நினைவாக, இந்த ஆலயத்திற்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டிருக்கிறது.
மேலும் இந்து சமய மக்களுக்கும் பிரபாஸ் கிரி ஒரு புண்ணியத் தலமாக விளங்குகிறது. அதாவது பகவான் கிருஷ்ணர் பூமியில் தனது இறுதி வாழ்நாட்களை பிரபாஸ் கிரியில் செலவழித்ததாக சொல்லப்படுகிறது.
பிரபாஸ் கிரியில் ஏராளமான குகைகளைப் பார்க்கலாம். இந்த குகைகளின் சுவர்களில் பழமையான பிராமி இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே இந்த சுவர்கள் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.
பிரபாஸ் கிரிக்கு வந்தால், அதன் அருகில் இருக்கும் காரா மற்றும் மன்ஜன்பூர் பகுதிகளுக்கும் சென்று வரலாம். காராவில் பல பிரபலமான இந்து சமய ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவையாக ஷீட்ல மாதா கோயில், சத்ரபால் பைரவ் கோயில், அனுமான் கோயில் மற்றும் காளீஸ்வர் மகாதேவ் ஆலயம் போன்றவை விளங்குகின்றன.
ஷீட்ல மாதா கோயில் கங்கை நதிக் கரையில் அமைந்திருக்கிறது. ஷீட்ல மாதாவிற்கு இருக்கும் 51 சக்திபீத்திகளில் மிக முக்கியமான சக்திபீத்தியாக இந்த கோயில் அழைக்கப்படுகிறது. மன்ஜன்பூரில் இருக்கும் காமாசின் தேவி ஆலயம் இந்த நகரத்திற்கு ஏராளமான பக்தர்களை அழைத்து வருகிறது.