ஜெயின் சமயத்தின் 6-வது தீர்த்தங்கரரான பகவான் பத்ம பிரபு பெயரில் அழைக்கப்படும் இந்த கோயில் பிரபாஸ் கிரியில் அமைந்திருக்கிறது. தாமரையில் மிக அழகாக அமர்ந்திருக்கும் இந்த தீர்த்தங்கரரின் அழகு சிலை இந்த கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. தீர்த்தங்கரர் தாமரைப் பூவில் அமைந்திருக்கும் நிலை தியான நிலையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த கோயில் 85 அடி உயரத்தில் பளபளக்கும் வென்மையான பளிங்கு மார்பிள் சிக்காரையும் மற்றும் கலைவடிவம் கொண்ட 11 வேதிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் பகவான் பத்மபிரபுவின் மிக உயரமான பிரமாண்ட சிலை இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்கிறது.
இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மிக அழ்ந்த அமைதியை அனுபவிக்கலாம். பத்ம பிரபு கோயிலைத் தரிசித்த பின்பு காராவில் இருக்கும் ஷீட்ல மாதா ஆலயம் மற்றும் மன்ஜன்பூரில் இருக்கும் காமாசின் தேவி ஆலயத்தையும் தரிசித்துவிட்டு வரலாம்.