பிரதாப்கர் மாநிலத்தில் உள்ள லால்கஞ் அஜ்ஹாரா எனும் இடத்தில் அமைந்திருக்கிறது குஷ்மேஷ்வர நாதர் அணை. இது ஒரு ஆன்மீக தலம். இராமபெருமான் இந்நகரத்தின் வழியாக சென்றதாக இராமாயணம் கூறுகிறது. அணையின் அருகே இருக்கும் அரிய கரீல் மரம் பற்றி துளசிதாஸ் கோஸ்வாமி அவர்களின் ராமசரிதமானாசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அணை அருகில் புனித சாய் ஆறும் ஓடுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்குள்ள கோவிலுக்கு வந்து வழிபட்டு, புனித நீராடி செல்கின்றனர்.