பழவேற்காடு பறவைகள் சரணாலயம் (சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது), பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும்.
481 கிமீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பரவி உள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய உப்பு நீர்நிலையான சில்கா ஏரிக்குப் பிறகு, இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக இருக்கும் பழவேற்காடு ஏரி மற்றும் சரணாலயம் ஆகியவை தேசிய அளவில் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன.
இந்த சரணாலயத்தின் மனம் மயங்க வைக்கும் உயிர்பன்முகதன்மை எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை பழவேற்காட்டை நோக்கி ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது.
பெரிய பிளமிங்கோஸ், பெலிகன்ஸ், சீ கல்ஸ், ஈக்ரட்ஸ், ஹெரான், பல்வேறு வகையிலான வாத்துகள் மற்றும் கைட் ஆகியவை இந்த சரணாலயத்தில் பரவலாக காணப்படும் பறவைகளாகும். இந்த சரணாலயம் அமைந்திருக்கும் இடம் தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பல்வேறு இடம் பெயரும் பறவையினங்களுக்கு தற்காலிக இருப்பிடமாக திகழும் இந்த சரணாலயத்திற்கு நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் வந்து செல்வது நல்ல அனுபவத்தைத் தரும்.
டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சுற்றுலாத் துறையினரால் நடத்தப்படும் பிளமிங்கோ திருவிழா பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது.