புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான நீரூற்றுதான் அரிபால் நாக் என்பதாகும். வாட்சூர்-வான் என்றழைக்கப் படும் சிறிய மலையின் ஒரு பகுதியிலிருந்து இந்த நீரூற்று ஊற்றெடுக்கிறது. இந்த நீரூற்றின் தண்ணீர் குடிக்கவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.