புல்வாமா மாவட்டத்திலுள்ள ஜாவ்ப்ராரி கிராமத்தில் உள்ள அவந்தீஸ்வரர் கோவில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மத தலங்களுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்து மதத்தில் காக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் மாக விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் சிவ பெருமான் ஆகியோரின் கோவில்கள் இங்குள்ளன.
கி.பி.9-ம் நூற்றாண்டில், உட்பால வம்சத்தின் முதன் அரசரான, ராஜா அவந்திவர்மன் என்பவர் இந்த கோவில்களைக் கட்டி புல்வாமாவை தனது தலைநகரமாக மாற்றிக் கொண்டார். தற்பொழுது சிதைவுகளுக்கிடையில் உள்ள இந்த கோவிலை கட்டுவதற்கு மணற்பாறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
பூமிக்கடியில் புதைந்து கிடந்த இந்த கோவிலை கி.பி.18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தோண்டி எடுத்தனர். இந்த அகழ்வாராய்ச்சியின் போது அவர்கள் சில தொல்பொருட்களையும் எடுத்தனர்.
ஸ்ரீ நகரில் உள்ள ஸ்ரீ பிரதாப் பிசங் மியூசியத்தில் இக்கோவிலின் தொல்பொருட்களை சுற்றுலாப் பயணிகள் காணலாம். அழிவின் பிடியில் இருந்தாலும் இந்த கோவிலின் கடவுள்களை தரிசிக்க சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.