புனலூர் தொங்கு பாலம் கல்லடா ஆற்றின் குறுக்கே 1877-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஹென்றி என்பவரால் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க முழுமையாக ஆறு ஆண்டுகள் ஆயின.
இந்த பாலம் கட்டப்பட்ட புதிதில் இதில் பயணம் செய்ய பொதுமக்கள் பெரிதும் அஞ்சினர். ஆனால் பொறியாளரும் அவர் குடும்பமும் பாலத்துக்கு அடியில் ஒரு நாட்டுப்படகில் பயணம் செய்ய, அந்த சமயம் ஆறு யானைகள் பாலத்தில் நடத்திச் செல்லப்பட்ட காட்சியை அனைவரும் பார்த்தபிறகு தொங்கு பாலத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
புனலூர் தொங்கு பாலம் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் வசித்து வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அங்கு அடிக்கடி வந்து சென்ற வன விலங்குகளை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த பாலம் நடக்கும் போது குலுங்குவதால் விலங்குகள் பாலத்தில் நடப்பதற்கு அஞ்சும். எனவே அவைகள் கான்கிரீட் பாலத்தை கடப்பதை போல் இந்த தொங்கு பாலத்தை கடக்க முடியாது.
புனலூர் தொங்கு பாலத்தை நான்கு ஆழமான கிணறுகள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் 100 அடி ஆழம் கொண்டவை.