இந்திய சுதந்திர போராட்டப் பின்னணியை கொண்டுள்ளதால் இந்த ஆகா கான் கோட்டை விசேட சிறப்பை பெறுகிறது. புனே மாவட்டத்தில் காணப்படும் இந்த கோட்டை சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகா கான் என்ற மன்னரால் கட்டப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சியின்போது பல சுதந்திர போராட்ட வீர்ர்களையும் புரட்சியாளர்களையும் இங்குதான் சிறை வைத்திருந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தேசப் பிதா காந்தி 1942ல் நடத்தியபோது அவரும் கஸ்தூரிபா காந்தியும் இங்கு சிறை வைக்கப் பட்டிருந்தனர்.
சுதந்திர போராட்ட வீர்ர்கள் மற்றும் தியாகிகளில் நினைவாக மியூலா ஆற்றின் அருகாமையில் இக்கோட்டைக்குள் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.