புனே நகரத்தில் அமைந்துள்ள இந்த தேஹு கோயில் துக்காராம் என்ற பிரசித்தி பெற்ற சமய குருவுக்காக அவரது மகனால் கட்டப்பட்டதாகும். இந்திரவதி ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயில் 300 வருடங்கள் பழமையை உடையது. இதே இடத்திலேயே துக்காராம் மோட்சம் எய்தியதாகவும் நம்பப்படுகிறது. இந்தக் கோயிலின் அருகில் ஒரு ஐயப்பன் கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.