பாலிகாய் கடற்கரை, பூரி-கோனார்க் கடற்கரைச் சாலையில், பூரியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரிஸ்ஸாவில் உள்ள, அவ்வளவாக ஆய்வுக்கு உள்ளாகாத இந்த கடற்கரை, கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு வருவோர் நதியின் அமைதியான நீரோட்டம், ஆர்ப்பாட்டமான கடலுடன் சேரும் காட்சியை கண்டு களிக்கலாம்.
இங்கு காணப்படும் ஒரு அமானுஷ்யமான ஈர்ப்பு சக்தி, நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பயணிகளை இங்கு வரவழைப்பதோடு, அயல்நாட்டவரை வியப்புக்குள்ளாக்குவதாகவும் விளங்குகிறது.
ரம்மியமான வானிலை மற்றும் கடற்கரையோரம் அலைமோதும் தண்ணீர் ஆகியவற்றுடன் திகழும் இந்த இடம் அழகுக்கு உதாரணமாக தோற்றமளிக்கிறது. இக்கடற்கரை சூரிய ஒளிக் குளியலில் ஆர்வம் உடையவர்களுக்கான மிகச் சிறந்த இடமாகும்.
இந்த இடம் சுவாரஸ்யமான படகு சவாரிகளையும் வழங்குகிறது. புத்துணர்வூட்டக்கூடிய இடமான இங்கு, பயணிகள் எவ்வித தடையும் இன்றி கடலில் நீந்தி தம் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றிற்கு புத்துயிர் அளிக்கலாம்.
தெளிவான நீரைப் பார்த்துக் கொண்டே, பொன்வண்ணத்தில் தகதக்கும் சுத்தமான மணலில் நடந்து செல்வது பேருவகை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.