மௌஸிமா கோயில், ஜகன்னாதர் கோயில் மற்றும் பூரியின் கிராண்ட் சாலையில் உள்ள கண்டிச்சா கோயில் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
ஜகன்னாதரின் சித்தி என்று கூறப்படுபவரும், அர்தாஸினி என்ற பெயரிலும் அறியப்படுபவருமான மௌஸிமா தேவி, பூரி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, கடல் நீரில் பாதியைப் பருகி, பூரி நகரை காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.
மேலும், மௌஸிமா தேவி, கபாலமோசன சிவனுடன் இணைந்து பூரியை அல்லும் பகலும் கண்காணித்து வருவதாக நம்பப்படுகிறது. ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கும் வருகை தருகின்றனர்.
இத்திருவிழாவின் போது, பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகளைத் தாங்கிய தேர்கள் நேரடியாக ஜகன்னாதர் கோயிலின் சிங்க துவாராவிற்கு கொண்டு செல்லப்படும் அதே வேளையில், ஜகன்னாதரின் தேர் மட்டும் மௌஸிமா கோயிலுக்கு முன் சிறிது நேரம் நின்று ‘போடா பிதா’ என்றழைக்கப்படும் அரிசி பண்டத்தை அவரது சித்தியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்.
மஹாசப்தமி மற்றும் மஹாநவமி திருவிழாக்களின் போதும் மௌஸிமா கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.