வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் காணப்படும் பூரி கடற்கரை, பூரி இரயில் நிலைத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரின் பிரபல சுற்றுலாத் தலமான பூரி கடற்கரை, நீச்சலுக்கு உகந்ததான தலைசிறந்த இந்தியக் கடற்கரைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் இக்கடற்கரையில் நடத்தப்படும் வருடாந்தர பூரி கடற்கரைத் திருவிழாவின் போது காட்சிப்படுத்தப்படும் மணல் ஓவியங்கள், ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றன.
சர்வதேச விருது வென்ற உள்ளூர் மணல் ஓவியக் கலைஞரான சுதர்ஸன் பட்நாயக்கின் கலைப் படைப்புகள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை; அதனால் இத்திருவிழாவின் போது நீங்கள் பூரியில் இருக்க நேர்ந்தால் கட்டாயம் சென்று பார்த்து மகிழுங்கள்.
கடற்கரையோரத்தில் அடர் பொன்னிறத்தில் தகதகக்கும் நீளமான மணல்வெளி, உடலை வருடும் மெல்லிய தென்றல், சூரிய ஒளியில் மின்னும் தெளிவான தண்ணீர், சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதக்காட்சிகள் ஆகியவை இந்த கடற்கரையை நிரந்தர ஈர்ப்பாகத் திகழச்செய்கின்றன.