இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் ரகுராஜ்பூருக்கென பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரிஸ்ஸாவின் பூரி மாவட்டத்தில் காணப்படும் சிறு கிராமமான ரகுராஜ்பூர் அதன் தலைசிறந்த பட்டா சித்திர கலைஞர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புகழ்பெற்ற ஒடிஸி நடனக்கலைஞரான கேலுசரண் மொஹபத்ரா இப்புகழ்பெற்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
இக்கிராமம், நேர்த்தியான துணிகளின் துண்டுகள், பேப்பர் மற்றும் காய்ந்து சருகாகிப் போன பனை இலைகள் ஆகியவற்றில் கவிதை இயற்றும் கலைஞர்களால் நிறைந்து காணப்படுகிறது.
கடவுள் இவ்விடத்தை பனைகள், மாமரங்கள், தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் மண்டலப் பகுதிக்குரிய இதர மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்களால் ஆசீர்வதித்துள்ளார்.
வீடுகளின் வெளிச்சுவர்களில், பெருங்காப்பியங்களான மஹாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றிலிருந்து காட்சிகளை விரிவாக சித்தரிக்கும் சுவரோவியங்களை இங்கு சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.
பெரும்பாலான வீடுகள் இரண்டு வரிசைகளில் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்ளும்படியான வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. சிறு கோயில்கள் மற்றும் சமூகக் கூட்டங்கள் நடைபெறும் மையமாகிய பகவத் துங்கி ஆகியவை கிராமத்தின் நடுப்புறத்தில் காணப்படுகின்றன. இக்கிராமத்தின் உறைவிட தெய்வமாகிய புவாசுனி தேவிக்கு கோயில் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.