சதபடா டால்பின் சரணாலயம் பூரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் டால்பின்களோடு சூரிய அஸ்த்தமனம் மற்றும் சூர்யோதய காட்சிகளுக்கும் பிரபலமாக இருப்பதால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு டால்பின்களை பார்த்து ரசிப்பதற்காக டால்பின் வியூ பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பின் மோட்டார் போட் கழகம் ஏற்பாடு செய்யும் மோட்டார் படகுப்பயணத்தில் நீங்கள் குடும்பத்தோடு ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இந்த படகுப் பயணத்துக்கு சிறிய அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.