உலகளவில் பிரசித்தி பெற்றுள்ள பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு அடுத்து பிரபலமாக உள்ள கோயில் ஸ்ரீ லோக்நாத் கோயில் ஆகும். ஜகன்னாதர் கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான், சனிபகவானின் பார்வையில் படாமல் தப்பிக்க இக்கோயில் குளத்தில் தான் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் காணப்படும் சிவலிங்கம், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.
பார்வதி குளத்துக்கு அருகில் உள்ள ஒரு இயற்கை நீரூற்று, சிறிய செவ்வக வடிவிலான கொள்கலனில் வீற்றிருக்கும் இந்த லிங்கம் எப்போதும் நீரில் இருக்கும்படி தொடர்ந்து நீரை சுரந்து வருகிறது.
லிங்கத்தை முழுதாக தரிசிக்க விரும்பும் பக்தர்கள், எல்லா நீரும் வாரி இறைக்கப்படும், சிவராத்திரிக்கு முந்தைய இரவான ‘பங்கதர் ஏகாதசி’ அன்று, அவ்வாறு தரிசித்து வழிபடலாம்.
லோகநாதரின் தெய்வ அருள், அனைத்து வலிகளையும், மனவேதனைகளையும் களையக்கூடிய சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. பல்வேறு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டோர், இங்கு வந்து வழிபட்டு தங்கள் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றிருக்கின்றனர்.