சுவர்கத்வார் என்பது பூரியில் உள்ள இந்துக்களின் சுடுகாடாகும். அதன் பெயரே உணர்த்துவது போல், இந்த இடம் சுவர்க்கத்துக்கு செல்வதற்கான் நுழைவு வாயில் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.
ஏராளமான புராணக் கதைகளைக் கொண்டிருக்கும் சுவர்கத்வாருக்கு இந்தியாவெங்கிலுமிருந்து எக்கச்சக்கமான மக்கள் வருகை புரிகின்றனர். இங்கு கடற்கரைக்கு அருகில் தனது கடைசி மூச்சை இழுத்து விடுபவர் நேரடியாக சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முக்தி பெறுவதாகக் கூறப்படுகிறது.
‘முக்தி’ அடையும் பொருட்டு மக்கள் சுவர்கத்வார் கடற்கரையில் நீராடுகின்றனர். புனிதமான பிரம்மதரு, மிகச்சரியாக இந்த இடத்திலிருந்து பூரி கடற்கரைக்கு மிதந்து சென்றதாக வழங்கப்படும் ஒரு கட்டுக்கதையும் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.