புஷ்கரில் உள்ள மூன்று புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் அப்தேஷ்வர் கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்தக் கோயில் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும்.
ஆனால் முகாலய மன்னன் ஔரங்கஜிப் இந்தக் கோயிலை முற்றிலுமாக இடித்து தகர்த்து விட்டான். அதன்பிறகு மீண்டும் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. இங்கு உள்ள பிரதான மண்டபத்தில் பேரழகே உருவாய் காட்சியளிக்கும் சிவலிங்கம் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.