புஷ்கரின் ஒட்டக சஃபாரி பயணிகளுக்கு பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தின் மணற்குன்றுகளில் ஒட்டகப் பயணம் செல்லும் அற்புதமான அனுபவத்தை பெறும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நள்ளிரவு நேரத்தில் இந்த பாலைவங்களில் நீங்கள் முகாமிட்டும் தங்கலாம். மேலும் சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் 2 நாள் முதல் 1 மாதம் வரை கூட தங்கள் பயணத்தை நீட்டிக் கொள்ளலாம்.
ஆனால் அனுபவமிக்க பயண வழிகாட்டி ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்வது முக்கியம். அவ்வாறாயினும் பாலைவனத்தில் முகாமிடுவதும், ஒட்டகப் பயணம் செல்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனினும் சிலிர்ப்பூட்டும் அந்த சாகச நாட்கள் என்றென்றைக்கும் உங்கள் மனதை விட்டு அகலாது.