ராஜஸ்தானின் புகழ்பெற்ற ஏமெர் கோட்டையை கட்டிய ராஜா மான் சிங்தான் மான் மஹாலையும் கட்டியுள்ளார். இந்த மஹால் புஷ்கர் ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது.
இதன் காரணமாக மான் மஹாலுக்கு வரும் பயணிகள் ஏரியை சுற்றி அமைந்துள்ள மற்ற கோயில்களுக்கும் சென்று பார்க்கலாம். ஆனால் இந்த பாரம்பரியப் பெருமை வாய்ந்த விருந்தினர் மாளிகை தற்போது ஹோட்டலாக மாற்றப்பட்டு ராஜஸ்தான் சுற்றுலாத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.