ரங்க்ஜி கோயில் சேத் புரான் மால் கனேரிவால் என்பவரால் 1823-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயில் விஷ்ணு பகவானின் அவதாரமான ரங்க்ஜிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ரங்க்ஜி கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜ்புட் மற்றும் முகாலய கட்டிடக்கலைகளின் கூறுகளையும் இந்தக் கோயிலில் காண முடியும். மேலும் இந்தக் கோயிலின் ராஜகோபுரமும், வாயிலில் செதுக்கப்பட்டிருக்கும் துவாரபாலகர்களின் சிலையும் அற்புதப் படைப்புகள்.