ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் தற்போது நீங்கள் 1979-ஆம் ஆண்டு சாய் பாபாவாலேயே கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்றை பார்க்கலாம். இந்தக் கோயில் நவம்பர் 23-ஆம் தேதி 1926-ஆம் ஆண்டு எங்கு சாய் பாபா பிறந்தாரோ அதே இடத்தில் ஒரு சிறிய வீட்டின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையும் கோயில் விக்கிரகங்களுக்கு அபிஷேகமும், தினமும் காலை முதல் மாலை வரை பூஜையும் தவறாமல் நடத்தப்படுகின்றன.