பூர்ணசந்திரா ஆடிட்டோரியம் ஒரே சமயத்தில் 15000 மக்கள் அமரும் வசதியுடன் 1973-ஆம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்த யோகிகள், அவதாரங்கள் ஆகியோரின் உருவங்கள் சுவர்ச் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன.
இந்த ஆடிட்டோரியம் தற்போது கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இங்கு தசரா பண்டிகையின் போது யாகம் ஒன்றும் நடத்தப்படுகிறது.