ராய் பரேலி மாவட்டத்தில் உள்ள புராதனமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நகரம் தனது செழிப்பான காலத்தில் உதய வம்ச அரசர்களின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
பத்மாவத் மற்றும் அக்ராவத் போன்ற நூல்களை எழுதிய மாலிக் முகமது ஜைஸி எனும் புகழ் பெற்ற கவிஞர் இந்த நகரில் பிறந்துள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் ஜைஸி சம்ரக் எனும் நினைவுச்சின்னம் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.