கி.பி. 1200-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரைஸென் கோட்டை, இந்த ரைஸென் மாவட்டதின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள மலைத்தொடரின் மேல் இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகே, இந்த நகரத்திற்கு ரைஸென் எனப் பெயர் கிடைத்தது.
மணற்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை அற்புதமான பண்டைய கால கட்டிடக் கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட பின்னரும் இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
பெரும் கற்சுவருடன் எழுப்பப்பட்ட இந்த கோட்டையானது ஒன்பது நுழைவாயில்களை கொண்டுள்ளது. இது மேலும் 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுளது. இவற்றை எல்லாம் விட மிக ஆச்சர்யமானது, இந்த கோட்டையின் நீர் மேலாண்மை திட்டம்தான்.
இந்த கோட்டையில் இன்றும் நல்ல நிலையில் சுமார் 40 கிணறுகள் உள்ளன. அதோடு இந்த பகுதியை சுற்றி பல்வேறு பண்டைய கால குகைகள் காணப்படுகின்றன. அவற்றில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் நம்முடைய நாட்டின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சான்றாக திகழ்கின்றன.