ஆணம்கலாகேந்திரம் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள ஒரே கலையரங்கமாகும். இது ஆணம் குடும்பத்தாரால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது ராஜமுந்திரி நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
துவங்கப்பட்டதிலிருந்தே பல உன்னதமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் அரங்காக திகழ்ந்து வரும் இந்த அரங்கு மாவட்ட ஆட்சியாளர் மற்றும் கமிஷனரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2008ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட நந்தி மஹோத்சவத்தின்போது இது புனரமைப்பும் செய்யப்பட்டது. நாடகக்கலை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ள இந்த கலையரங்கம் பல திசைகளிலிருந்தும் கலைஞர்களை ஈர்க்கிறது.
ராஜமுந்திரி நகத்தின் கலாச்சார அடையாளம் மற்றும் உன்னதங்களை புரிந்துகொள்ள இந்த ஆணம்கலாகேந்திரத்திற்கு விஜயம் செய்வது மிக அவசியம்.