ராஜமுந்திரி நகரத்தில் பிறந்து வாழ்ந்த, புகழ் பெற்ற ஓவியக்கலைஞரான திரு டாமர்லா ராமா ராவ் என்பவரது ஞாபகார்த்தமாக இந்த ஆர்ட் கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப்பின் 92 வருடங்களை கடந்து, அவரது அற்புதமான ஓவியங்கள் பல இந்த காட்சிக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியத்துறையில் ஒரு மறுமலர்ச்சியாளராக விளங்கிய இந்த டாமர்லா ராமா ராவ் ஆந்திர ஓவியப்பாணிக்கு மெருகூட்டி வளர்த்தெடுத்துள்ளார். ஓவியக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கலைக்கூடத்திற்கு விஜயம் செய்வது நல்லது.
தன் வாழ்நாளில் பல ஓவியக்கல்லூரிகளை துவங்கி வைப்பதிலும் இந்த ஒப்பற்ற ஓவியக்கலைஞர் தனது முயற்சிகளை செலவிட்டுள்ளார். அவற்றில் ராஜமுந்திரி சித்ரகலாசாலா எனும் ஓவியக்கல்லூரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அற்புதமான ஓவியப்படைப்புகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் ஓவியக்கலை குறித்த கல்விக்கு வழிவகுப்பதிலும், சமூகத்தளத்தில் கலைவடிவங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார்.
இன்று தேசிய அளவில் கலையம்சங்களுக்காக ராஜமுந்திரி நகரம் பிரசித்தி பெற்றிருக்கிறதென்றால் அதற்கான பெருமை முழுதும் இவரையே சாரும். அப்படிப்பட்ட ஒரு மஹோன்னத கலைஞரை கௌரவிக்கும் வகையில் இந்த ஓவியக்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இது வெள்ளிக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறந்திருக்கும்.