ஷியாமளாம்பா அம்மவாரி தேவஸ்தானம் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். ஆதியில் இந்த கோயிலில் இருந்த ஷ்யாமாளாம்பா சிலைக்கு பதிலாக சோமளம்மா அம்மவாரு எனும் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
பார்வதி தேவியின் ஒன்பது அவதாரங்களில் இந்த சோமளம்மா அம்மவாரு அம்மனும் ஒன்றாகும். சாளுக்கிய மன்னர்கள் இந்த அம்மனை முக்கிய தெய்வமாக வணங்கி வழிபட்டுவந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சாளுக்கிய மன்னர் நரேந்திராவுக்கு இஷ்ட தெய்வமாக இந்த கோயிலின் அம்மன் விளங்கியிருக்கிறது. தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளின்போது இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த திருநாள் மார்ச் மாதத்தின்போது வரக்கூடியதாகும். நவராத்ருலு மற்றும் கணுமா சேவா போன்ற இதர பிரசித்தமான திருவிழாக்களும் இக்கோயிலில் முறையே செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.