வேணு வனா என்பது ஒரு செயற்கை காடாகும். அமைதியை ரசிக்கவும் தியானம் செய்யவும் உருவாக்கப்பட்ட காப்பிடமாகும். இங்கே புத்தருக்காக பிம்பிசாரா பேரரசர் கட்டிய அழகிய மேடம் ஒன்று உள்ளது.
ராஜ்கிர் நகரத்தை வலுவூட்ட கட்டப்பட்டதே இந்த சைக்லோபியன் கட்டுமானமாகும். இது ஒரு வகை கற்களால் கட்டப்பட்ட சுவர்களாகும். இதன் மீது சுண்ணாம்புக்கல் பாறாங்கற்களும் வைக்கப்பட்டுள்ளது.
இவை மைசென்னேன் வகை கட்டடக்கலையை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. மௌரய...
சோன்பந்தர் குகைக்கு போற்றத்தக்க வரலாறு உள்ளது. மேலும் இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்கியது என்று நம்பப்படுகிறது.
இந்த குகை வழியாக...
மகதாவை ஆண்ட அஜத்ஷத்ரு அரசரால் கட்டப்பட்டதே அஜத்ஷத்ரு கோட்டை. தனித்துவத்துடன் விளங்கும் இந்த கோட்டையை ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும்
சமாதான பகோடா என்றழைக்கப்படும் விஷ்வ சாந்தி ஸ்தூபா ஒரு வரலாற்று தூணாகும். ரணகிரி மலையில் 400 மீட்டர் உயரத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள இந்த தூண் புனிதமாக பார்க்கப்படுகிறது.
இந்த தூண் வெள்ளை மார்பில் கற்களால் கட்டப்பட்டது. இது உலக சமாதானத்தை குறிக்கும்....
பிம்பிசார் சிறைச்சாலையிலிருந்து கிரிட்டகுடா மலை மற்றும் ஜப்பானியர்களின் பகோடாவின் எழில்மிகு தோற்றம் தெரியும். கௌதம புத்தரின் நம்பிக்கையுறுதியான சீடரான பிம்பிசார் அரசரை அவருடைய மகன் அஜட்ஷத்ரு சிறையிலிட முடிவு செய்தார்.
எந்த இடத்தில் சிறையிட வேண்டும் என்று...
சாரியட் ரூட் மார்க்ஸ் என்பது ஒரு பாறையை இரண்டாக பிரித்து 30 அடி நீல வாய்க்காலாக ஆக்கப்பட்ட இடமாகும். இது கிருஷ்ணரின் ரதம் சென்ற பாதை என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் செதுக்கல்கள் (எழுத்துருக்கள்) கி.பி.1-5 ஆம் நூற்றாண்டில்...
ஜரஷண்டா கா அக்ஹரா ஒரு போர்க்களமாகும். மகதன் நகரை ஆண்ட பேரரசரான ஜரஷண்டாவின் நினைவாக இந்த இடத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. பீமா மற்றும் ஜரஷண்டா அரசருக்கு எதிராக நடந்த போரின் நினைவாக இந்த போர்க்களம் உருவாக்கப்பட்டது.
அஜட்ஷத்ரு அரசர் மற்றும் பிம்பசாரா அரசர் காலத்தில் அரசவை மருத்துவராக விளங்கிய ஜீவகாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜீவகமீவன் தோட்டம் உருவாக்கப்பட்டது. புத்தர் கூட ஜீவகாவை சந்தித்துள்ளதாக நம்பப்படுகிறது.
கரந்தா தொட்டி மௌரியர்களின் போற்றத்தக்க வரலாற்றையும் அழகாக எழுப்பிய கட்டட அமைப்பையும் பேசும். கௌதம புத்தர் இந்த இடத்தில் தங்கியிருந்த போது இந்த குளத்தில் நீராடுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பல வருடங்களாக ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு ராஜ்கிர் ஒரு முக்கியமான புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது பஞ்ச் பஹடிக்காகவும் புகழ் பெற்றுள்ளது. இந்த கோவில்களில் இருந்து தான் பல துறவிகள் கடும் தவத்தினால் மோட்சம் அடைந்தார்கள்.
ஜெயின் மதத்தை உருவாக்கிய...
பிரம்மகுந்த் என்றழைக்கப்படும் வெந்நீர் ஊற்று வைபவ மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து வரும் வெந்நீர் சப்டதாரா என்ற ஏழு ஓடைகளில் இருந்து வரும் நீராகும்.
இந்த ஊற்றில் அதிக வெப்பத்துடன் வரும் நீர் 45 டிகிரி சென்டிக்ரேட் வரை இருக்கும். ஆண்கள்...
பிப்பலா குகை வைபவ மலையில் உள்ளது. இயற்கை குகையான இது காவல் கோபுரமாக விளங்கியதே இதன் தனித்துவமாகும். பின்னர் இது புத்த துறவிகளுக்கு பாதுகாப்பான தங்குமிடமாக மாறியது.