ராஜிம் நகரத்தை ஒட்டி மஹாநதி மற்றும் பைரி ஆறுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதி ஒன்றுள்ளது. இந்த தீவில் உள்ள ஒரு பிரசித்தமான சிவன் கோயில் இந்த குலேஷ்வர மஹாதேவா மந்திர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் 17 அடி உயரம் கொண்ட ஒரு எண்முக வடிவ பீட அமைப்பின்மீது உருவாக்கப்பட்டிருக்கிறது.
சிவபெருமானுக்கான இந்த கோயிலில் 26 அடி நீளமுள்ள மண்டபம் மற்றும் கருவறை ஆகியவை காணப்படுகின்றன. கடவுளர் மற்றும் தேவியர் உருவங்கள் இந்த கோயிலின் தூண்களில் வடிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.