காபா காந்தி என்று அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் தந்தையான கரம்சந்த் காந்தி ராஜ்கோட் நகரிலுள்ள கீ கான்டா சாலையில் உள்ள பாரம்பரிய வீட்டில் வசித்து வந்த போது, மகாத்மா தன்னுடைய சிறுவயது காலங்களை ராஜ்கோட்டில் கழித்துள்ளார்.
தற்பொழுது இந்த பெரும் தலைவரின் நினைவுகளை தாங்கியுள்ள மியூசியமாக காந்தி ஸ்மிருதி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு புகைப்படங்கள், தொல்பொருட்கள் மற்றும் மகாத்மா காந்தியின் உடமைகள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்துள்ள இடமாக இது உள்ளது.
வாரத்தின் ஆறு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இந்த மியூசியம் திறந்திருக்கும்.