கைராகர் நகரம் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இங்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகள் போன்றவை அமைந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்நகரம் நல்ல சாலைவசதிகள், ரயில் இணைப்புகள் போன்றவற்றையும் பெற்றிருக்கிறது. தண்டேஷ்வரி மாய் மற்றும் வீரேஷ்வர் மஹாதேவ் கோயில் போன்றவை இங்கு பார்க்க வேண்டிய அம்சங்களாக காத்திருக்கின்றன.
இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே உள்ள ஒரே ஒரு இசைப்பல்கலைக்கழகம் எனும் பெருமையை பெற்றுள்ள ‘இந்திரா சங்கீத் அன்ட் கலா விஷ்வவித்யாலய்’ எனப்படும் இசை மற்றும் நிகழ்த்துகலை பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.
இது ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. நிசப்தமும் தூய்மையும் கவிந்திருக்கும் இந்த பல்கலைக்கழக வளாகம் இசை மற்றும் கலை ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.
ஒரு காலத்தில் இந்த கைராகர் பகுதி ஜமின் தார்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பாண்டதஹ் எனும் இடம் ஒரு முக்கியமான வரலாற்றுத்தலமாகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.
மண்வளம் நிரம்பிய இந்த பகுதியில் நெல் மற்றும் பருத்தி அதிகமாக பயிராகின்றன. ஏப்ரல் முதல் ஜுன் வரை இங்கு அதிக வெப்பநிலை காணப்படும். ஏனைய மாதங்களில் மிதமான இனிமையான பருவநிலை மற்றும் சூழலுடன் கைராகர் பகுதி பயணிகளை வரவேற்கிறது.
உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகம் இந்த நகரத்திலிருந்து சாலை மார்க்கமாக மூன்று மணி நேரப்பயணத்தில் ராய்பூரை சென்றடைந்து விடலாம். ராஜ்நாந்த்காவ்ன், டோங்கார்கர் மற்றும் துர்க் ரயில் நிலையங்களும் அருகில் அமைந்திருக்கின்றன.
இவை முறை 40, 42 மற்றும் 52 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கின்றன. டோங்கார்கர் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வசதிகள் கிடைக்கின்றன. இங்கிருந்து 265, 103 கி.மீ தூரத்தில் நாக்பூர் மற்றும் ராய்பூர் விமான நிலையங்கள் அமைந்திருக்கின்றன.