ராஜோவ்ரி மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் மன்டி சௌக்கில் உள்ள பாலிடான் பவன் ஒரு பிரபலமான சுற்றுலாதலமாகும். 1947-48-ம் ஆண்டு போரில் இறந்த குடிமக்களின் நினைவிடமாகவும் இந்த போர் நினைவுச் சின்னம் கருதப்படுகிறது.
1947-ம் ஆண்டு, தீபத்தின் பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளின் போது இங்கு போர் தொடங்கியது. இந்த பண்டிகை தின இரவில், இந்திய இராணுவம் இல்லாத இந்நகரத்தை பாகிஸ்தான் படைகள் எளிதில் கைப்பற்றி விட்டன.
13 ஏப்ரல் 1948-ல் பஞ்சாப்பின் பைசாகி பண்டிகையின் போது, இந்திய இராணுவம் இந்நகரத்தை மீண்டும் கைப்பற்றியது. இந்த போரில் இறந்த தியாகிகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த போர் நினைவுச்சின்னத்திற்கு 'தியாகங்களின் நினைவிடம்' என்று பொருள் தரும் ‘பாலிடான் பவன்' என்ற பெயர் சரியாக சூட்டப்பட்டுள்ளது.