ராஜோவ்ரி மாவட்டத்தின் முதன்மையான மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த் சிங் ஜி-க்காக இந்த குருத்துவாரா கட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி, 1616-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை சந்திக்க செல்லும் போது வழியில் இங்கே சில நாட்கள் குரு ஹர்கோபிந்த் சிங் ஜி தங்கியிருந்திருக்கிறார்.
4 அடுக்குகளையும், 15 அறைகளையும் மற்றும் அவற்றில் 8 அறைகளை கொண்ட பள்ளி / பாடசாலையையும் இந்த இடம் கொண்டிருக்கிறது. 1960-ம் ஆண்டு சர்தார் தாரா சிங் என்ற பொறியாளர் இந்த இடத்தை பெரிது படுத்தும் பொருட்டு மீண்டும் வடிவமைத்தார்.
சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா என்ற இந்த இடம் ஞாயிற்றுக் கிழமைகளில் திரளான மக்கள் கூட்டத்தை எப்பொழுதும் கொண்டிருக்கும்.
குரு ஹர்கோபிந்த் சிங் ஜி-யின் பிறந்த நாளின் போதும் ஏகப்பட்ட பக்தர்கள் இந்த குருத்துவாராவிற்கு வருகை தருவார்கள். இந்த இடத்திற்கருகில் ஸ்ரீ ஹர்கோபிந்த் சாஹிப் கல்வியியல் கல்லூரியையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.