ராஜோவ்ரி மாவட்டதிலுள்ள ஜாங்கர் கிராமத்தில், நௌஷேரா-ஜாங்கர் வழித்தடத்தில் மங்ளா மாதா கோவில் உள்ளது. இந்த புனிதத்தலம் 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. பெண் தெய்வமான மங்ளா தேவி பல்வேறு துறவிகளின் கனவில் வந்து இந்த கோவிலை எழுப்ப கேட்டுக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
இந்த கோவிலின் புனிதமான நாளக கருதப்படும் செவ்வாய்கிழமைகளில் பெருந்திரளான எண்ணிக்கையில் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பௌர்ணமி காலங்களில் வரும் 'சாண்டி பக்ஷ்' என்ற செவ்வாய்கிழமை தினம் தான் இதில் முக்கியமான தினமாகும்.
மேலும், இந்து பண்டிகையான நவராத்திரியின் போது எண்ணற்ற பக்தர்களை வரவழைக்கும் இடமாக இந்த கோவில் உள்ளது.
மங்ளா மாதா கோவில் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இப்பகுதிகளுக்கான வேதங்கள் என்று கருதப்படும் 'ஸ்தான் கன்ஸ்' என்றழைக்கப்படும் இடங்கள் கண்ணில் படும்.
இந்த புனித தலத்தின் முக்கியமான பார்வையிடங்களாக 'இராமாயண் பாதை' மற்றும் 'ஹவான் குந்த்' ஆகிய இடங்கள் உள்ளன. பெண் தெய்வமான மங்ளா மாதாவின் தலையைப் போன்றே வடிவங்களைக் கொண்ட இயற்கையான பாறை வடிவங்களையுடைய 'பின்டிஸ்' என்ற குகைகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.