நௌஷேரா நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மங்ளாதேவி கிராமத்தில் கற்குன்றுகளின் மேல் மங்ளாதேவி கோட்டை அமைந்துள்ளது.
மூன்று பக்கங்களில் தண்ணீரால் சூழப்பட்டும், இந்த பகுதியிலேயே மிகப்பெரிய கோட்டையாகவும் உள்ள மங்ளாதேவி கோட்டை அதன் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.
ராஜா உமர்கானிடமிருந்த இந்த கோட்டையைப் பிடிக்க மோகன் சிங் சுகர்சக்கா மற்றும் சர்தார் சாஹிப் சிங் ஆகியோர் பறிக்க முயன்று தோற்று விட்டனர்.
சமமான தொலைவுகளில் கட்டப்பட்டிருக்கும் கொத்தளங்களை இந்த கோட்டையின் சுவர்களில் சுற்றுலா பயணிகள் காண முடியும். பெரும்பாலும் 6 மீ உயரத்தையுடைய இந்த கோட்டையின் சுவர்களுக்கிடையில், இரட்டை வரிசைகளில் கற்களைக் கொண்டு தாக்கும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் இதன் உற்புற தரைப்பகுதிகள் ஒழுங்கான வடிவமைப்பில் இல்லாதிருப்பதையும் சுற்றுலாப் பயணிகள் காண முடிகிறது. மேலும், பெரிய பீரங்கியையுடைய கருவூல அறையையும் இந்த கோட்டையில் காணலாம்.