ராஜோவ்ரியிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் பிரபலமான மத வழிபாட்டுத்தலம் தான் ஜியாரட் செயின் காஞ்சி சாஹிப். இந்த புனிதத்தலம் தர்ஹால் நளாவை ஓரம் கட்டிவிடுமளவிற்கு புகழ் பெற்ற இடமாகும்.
இந்த இடத்தின் பெயருக்கேற்பவே, பதேபூரைச் சேர்ந்த செயின் காஞ்சி சாஹிப் என்பவருக்காகவே இவ்விடம் கட்டப்பட்டுள்ளது. இந்த உலகத்தை மனிதர்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு செயின் காஞ்சி சாஹிப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
வருடாந்திர உர்ஸ் பண்டிகை நடத்தப்படும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜியாரட் செயின் காஞ்சி சாஹிப்பிற்கு வருகை தருவார்கள்.