ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
1964-ம் ஆண்டு தனுஷ்கோடி கிராமத்தைப் புயல் தாக்கி அழித்த போது அங்கிருந்த இந்த சிலைகள் இப்போதுள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளுக்குள் இந்த கடவுள்களின் ஆன்மா இருக்கிறது என ஆச்சரியமூட்டும் வகையில் நம்பப்படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலிற்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த கோவிலுக்கு வெளியிலிருக்கும் மிதக்கும் கல்லாகும். இராவணன் வசித்து வந்த இலங்கை செல்வதற்காக அனுமான் மற்றும் பிற வானர இராணுவ வீரர்களால் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதியாகவே இந்த கல் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அனுமான் தன்னுடைய ஐந்து முகங்கள் அல்லது ஐந்து வித வடிவங்களையும் காட்டிய இடமாக இந்த இடம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்குதான், இராமர் அனுமனுக்கு செந்தூர பொட்டினை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.