இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை சொல்லலாம். இது ஒரு சாதாரண கோவிலாக இல்லாமல், இராமேஸ்வரம் நகரத்தின் வரலாற்றுடன் மிகத்தொடர்புடையதாக இருப்பதால் தான், இராமேஸ்வரம் நகரத்தின் மையப்பகுதியில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிவபெருமானுக்கான இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இந்த இராமேஸ்வரம் கோவில் உள்ளது.
இந்த கோவில்களில் சிவபெருமான் ஜோதிர்லிங்க வடிவத்தில் உள்ளதால், அவருக்கு தனியாக சிலைவைத்து வழிபாடு நடத்தப்படுவதில்லை.
மிகப்பழமையான வரலாற்றையுடைய கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
கலையும், கட்டிடக்கலையும் இந்த கோவிலின் அற்புதங்களில் ஒன்றாகும். எனவே தான், மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.