இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும்.
மாணிக்கவாசகரின் வரிகளில் இந்த புகழ் பெற்ற கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும்.
சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த கோவில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களால் மிகவும் போற்றப்படும் இடமாக விளங்குகிறது.
இந்த கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான மரகத நடராஜர் சிலையொன்றும் உள்ளது. இந்த நடராஜர் சிலையின் சிறப்பு அது முழுமையும் மரகதத்தால் செய்யப்பட்டிருப்பது தான்.
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான சிவ பக்தர்கள் இங்கு வந்திருந்து, கடவுளின் அருள் பெற்று வருகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகளும் கூட இந்த காலகட்டங்களில் நடக்கும் விழாக்கோலத்தை அனுபவிக்க இங்கு வருவார்கள்.