இராமநாதபுரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் எல்லா பறவை பிரியர்களையும் கவரும் சரணாலயமாகும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வழக்கமாக அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெருவாரியான பறவைகள் வந்து குவியும். இந்த சரணாலயத்தில் உள்ளூர் மற்றும் இடம் பெயரும் வகை பறவைகள் பலவற்றையும் காண முடியும்.
இங்கு காணப்படும் உள்ளூர் பறவைகள் வருடம் முழுவதுமே உணவிற்காக இந்த சரணாலயத்திற்கு வருகை தரும். ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
வழக்கமாக இந்த பறவைகள் வடகிழக்கு பருவக்காற்று காலத்திலேயே இங்கு வருகை தருகின்றன. எனவே இந்த சரணாலயத்தில் அரியவகை மற்றும் தனித்தன்மையான பறவைகளை நீங்கள் காண முடியும்.
உலகம் முழுவதும் உள்ள பறவை பிரியர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கிருக்கும் பறவைகளின் குணாதிசயங்களை கவனித்து செல்கின்றனர்.
பறவைகள் தங்களுக்கு பிடித்தமான இடங்களை குறிப்பிட்டு வைத்திருக்கும், அந்த இடங்களை இங்குள்ள அதிகாரிகளும் சுற்றுலா வசதிக்காக குறிப்பிட்டு வைத்திருப்பார்கள்.
இந்த இடங்களில் தான் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும். இந்த சரணாலயத்திற்கு வரும் போது உங்களுடைய பைனாகுலர்களை மறவாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.