நகரத்திற்கு வடக்கே 4கிமீ தொலைவில் உள்ள தாகூர் மலைக்கு ரபீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஜ்யோதீந்திரநாத் தாகூர் 1908ல் வருகை தந்தார். இந்த இடத்தின் அழகில் மயங்கி இங்கே ஒரு அழகிய வீடும் கட்டினார். 300அடி உயரமுள்ள தாகூர் மலையில் ரபீந்திரநாத் தாகூர் பல புத்தகங்களை எழுதியதாக நம்பப்டுகிறது.
இயற்கை அழகு நிறைந்த இந்த இடத்தில் திவ்யயான் மற்றும் அகரேரியன் கைத்தொழில் பயிலகம் ஒன்றும், புகழ்பெற்ற ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமமும் உள்ளன. மலையேற்றத்திற்கு சிறந்த இடமாக இந்த மலை கருதப்படுகிறது.