ராணிக்கேத் நகரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கண்டோன்மெண்ட் ஆஷியானா பார்க் எனப்படும் இந்த தோட்டப்பூங்கா அமைந்துள்ளது.
இப்பிரதேசத்திலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட பூங்கா எனும் பெருமையை கொண்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான மிருகக்காட்சி சாலை, மூலிகைத்தோட்டம் மற்றும் வண்ண நீரூற்று ஆகியவை அமைந்துள்ளன.
இமயமலைச்சிகரங்களின் அழகை ரசித்தபடி மாலை நேரத்தினை ஓய்வாக கழிக்க இது மிகவும் பொருத்தமான இடமாக திகழ்கிறது.