ஹைராக்கான் தம் எனப்படும் இந்த ஆன்மீகத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. உள்ளூர் கதைகளின்படி, ஹைராக்கான் பாபா எனும் குரு இங்கு 1970 முதல் 1984 வரை வசித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வளாகத்திலேயே அமைந்துள்ல ஹைராக்கான் கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம். இக்கோயில் அந்த பாபாவால் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டதாகும். ஆன்மீகச்சூழலுடன் காட்சியளிக்கும் இந்த ஸ்தலத்திலிருந்து இயமலைத்தொடர்களின் அழகையும் தரிசிக்கலாம்.