தரிகேத் எனும் இந்த சிறிய கிராமம் ராணிக்கேத் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இது காந்தி குடியா எனும் நினைவு இல்லத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த இல்லத்தில் மஹாத்மா காந்தி ஒரு காலத்தில் வசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமான இந்த இடம் சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய அடையளத்தலமாக அறியப்படுகிறது.
இந்த இடத்திற்கு வரும் பயணிகள் அருகிலேயே அமைந்திருக்கும் கொலு தேவதா கோயில் எனும் முக்கியமான கோயிலையும் தரிக்கலாம். கொலு தேவதா எனும் தெய்வம் குமாவூங் பகுதியின் பாரம்பரிய தெய்வங்களில் ஒன்றாகும்.