கச்சிடா வேலி என்றழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்கு காட்டுப்பகுதி ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது பலவிதமான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளுக்கு பெயர் பெற்றுள்ளது.
காட்டுயிர் பூங்காவின் ஒட்டுமொத்த சிறுத்தை எண்ணிக்கையும் இந்த பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. கரடிகள் மற்றும் மான்களையும் இங்கு பார்க்கலாம்.
பயணிகளுக்காகவே இயக்கப்படும் சஃபாரி ஜீப்புகளில் பயணம் செய்து இந்த பள்ளத்தாக்கு காட்டுப்பகுதியின் இயற்கை எழில் அம்சங்களை சுற்றுலாப்பயணிகள் ரசிக்கலாம்.