ரணதம்போர் தேசிய காட்டுயிர்ப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ள இந்த பதாம் தலாவ் ஏரி மிக அழகான பெரிய ஏரியாகும். இதன் கரையிலேயே ஜோகி மஹால் எனும் அக்காலத்திய வேட்டை மாளிகை அமைந்துள்ளது.
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இந்த ஏரியில் நீர் அருந்துவதற்காக காட்டு விலங்குகள் வருகை தரும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை பயணிகள் காணலாம். காட்டுயிர் புகைப்பட ஆர்வலர்கள் மத்தியில் இந்த ஏரி ஸ்தலம் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.